ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான குமுதினி என்பவர் தற்போது சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த குமுதினி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாத் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த், தன்னிடம் 10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் தரப்பில் இருந்து குமுதினிக்கு மூன்று முறை பிரச்சனை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார்கள் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசாந்த்தும் அந்த பெண் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இரண்டு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.