நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் 'நடிகையர் திலகம்' என டப்பிங் ஆகி வெளிவந்த 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க 'பிராஜக்ட் கே' என்ற படத்தை இயக்கிய வருகிறார். பிரம்மாண்டமான பொருட் செலவில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
தீபிகா படுகேனே கதாநாயகியாக நடிக்க, அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளுக்கும் பிரபலமான நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள்.

தென்னிந்திய மொழிகளுக்காக மேலும் சில நடிகர்களை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ்த் திரையுலகத்திலிருந்து சூர்யா, மலையாளத்திலிருந்து துல்கர் சல்மான், மேலும் தெலுங்கு ஸ்டார் ஆன மகேஷ் பாபு ஆகியோரும் நடிக்கப் போகிறார்கள் என சொல்லி வருகிறார்கள். இது உண்மையா, வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.