திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
துப்பாக்கிமுனை, ராட்சன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்மு அபிராமி, அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு பல படங்களில் நாயகியாக நடித்து வரும் அபிராமி தற்போது ஒப்பந்தமாகி உள்ள படம் பெண்டுலம். இந்த படத்தில் அவர் சட்டப்படி குற்றம், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கோமல் சர்மாவுடன் இணைந்து நடிக்கிறார்.
திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.சதீஸ் குமரன் இயக்குகிறார். சைக்கலாஜிகல், பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகிறது. ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், விஜித், ராம், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சைமன் கிங் இசை அமைக்கிறார், ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பி.சதீஸ்குமரன் கூறியதாவது: நான் 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக இருக்கிறேன். விளம்பர படங்கள், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றினேன். இந்த படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் பேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் முதல்முறையாக 8 கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் சொல்லப்படும் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது. இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.