நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்த யோகிபாபு தற்போது கதையின் நாயகனாக நடிக்கும் படம் யானை முகத்தான். இந்த படத்தின் மூலம் மலையாள இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், குளப்புள்ளி லீலா, நாகவிஷால் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், பரத் சங்கர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ரெஜிஷ் மிதிலா கூறியதாவது: இந்த படத்தில் யோகி பாபு, கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். ரமேஷ் திலக் வாங்கும் கடன்களுக்கு யோகி பாபு பொறுப்பேற்று எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படம். என்றார்.