யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
'தெய்வமகள்' சீரியல் மூலம் சின்னத்திரையின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். திரைப்படங்களுக்காக வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் ஆப்ஷனை ஓகே செய்து நடித்து வந்தார். அதன்பின் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 'பகைவனுக்கு அருள்வாய்', 'கேசிநோ', 'பாயுமொளி நீ எனக்கு', 'மிரள்','தாழ் திறவாய்', 'ஊர்க்குருவி' மற்றும் 'காசிமேடு' என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இவற்றில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஆனால், ஒரு காலத்தில் இவர் சினிமாவில் நடிக்க சென்றபோது சில ஹீரோக்கள் இவரை சீரியல் நடிகை என்பதாலேயே ரிஜக்ட் செய்தனர். அப்படி மட்டுமே வாணி போஜன் பல படவாய்ப்புகளை இழந்துவிட்டார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்த வாணி போஜன் இன்று தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக, பிசியாக நடித்து வருகிறார். அன்று வாணி போஜனை ரிஜக்ட் செய்த ஹீரோக்கள் இன்று அவரது திறமையையும், புகழையும் பார்த்து தங்களுடன் சேர்ந்து நடிக்குமாறு தூது அனுப்பி வருகின்றனர். ஆனால், வாணி போஜனோ அவர்களுக்கு 'நோ' சொல்லி பதிலடி கொடுத்து வருகிறாராம்.