இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

'தெய்வமகள்' சீரியல் மூலம் சின்னத்திரையின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். திரைப்படங்களுக்காக வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் ஆப்ஷனை ஓகே செய்து நடித்து வந்தார். அதன்பின் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 'பகைவனுக்கு அருள்வாய்', 'கேசிநோ', 'பாயுமொளி நீ எனக்கு', 'மிரள்','தாழ் திறவாய்', 'ஊர்க்குருவி' மற்றும் 'காசிமேடு' என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இவற்றில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஆனால், ஒரு காலத்தில் இவர் சினிமாவில் நடிக்க சென்றபோது சில ஹீரோக்கள் இவரை சீரியல் நடிகை என்பதாலேயே ரிஜக்ட் செய்தனர். அப்படி மட்டுமே வாணி போஜன் பல படவாய்ப்புகளை இழந்துவிட்டார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்த வாணி போஜன் இன்று தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக, பிசியாக நடித்து வருகிறார். அன்று வாணி போஜனை ரிஜக்ட் செய்த ஹீரோக்கள் இன்று அவரது திறமையையும், புகழையும் பார்த்து தங்களுடன் சேர்ந்து நடிக்குமாறு தூது அனுப்பி வருகின்றனர். ஆனால், வாணி போஜனோ அவர்களுக்கு 'நோ' சொல்லி பதிலடி கொடுத்து வருகிறாராம்.