ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் பிரமாண்ட படமாக இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார் மணிரத்னம். முதல்பாகம் செப்., 30ல் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ய ராய், திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே டீசர், இரண்டு பாடல்கள் வெளியானது. இப்போது செப்., 6ல் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இசை, டிரைலரை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழா பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.