ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

என்னதான் முன்னணி சேனல்கள் பல இருந்தாலும் மக்களின் ரசனை அறிந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டி.வி. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வேறு பெயரில் ஒளிபரப்பும். கோடீஸ்வரன், பிக் பாஸ் உள்ளிட்ட சர்வதேச நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது விஜய் சேனல். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வரிசையில் அடுத்து வரும் புதிய நிகழ்ச்சி ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா?. புஷ்பா படத்தின் புகழ்பெற்ற பாடலின் வரியையே தலைப்பாக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியை மா.பா.கா ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளர் வைக்கும் பணத்தை விட எதிரில் ஆடுகிறவர் அதிகமான தொகையை வைக்க வேண்டும். அவர் அதை ஏற்க மறுத்தால் மேலும் தொகையை வைக்க வேண்டும். இப்படி போகும் இந்த விளையாட்டு. இந்த புதிய கேம் ஷோம் வருகிற (செப்டம்பர்) 4ம் தேதி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.