ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஷாருக்கான் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பதான் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ள ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து டுன்ங்கி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இனி படங்கள் தோல்வி அடையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஷாருக்கான் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் கதை மட்டும் கேட்டு வருகிறார். அவற்றை மிகவும் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில்தான் ஏற்கெனவே வெற்றி பெற்ற டான் படத்தின் 3ம் பாக கதையும் அவரிடம் கொடுக்கப்பட்டது. இதை படித்து பார்த்த ஷாருக்கான் கதையில் தனக்கு திருப்தி இல்லை என்று அதை நிராகரித்து விட்டார். இன்னும் வலுவான கதையோடு வாருங்கள் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் டான் 3 படத்தில் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை டான் படத்தின் இயக்குனர் பர்ஹான் அக்தரே வெளியிட்டுள்ளார். டான் முதல் பாகம் 2006ம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 2011ம் ஆண்டும் வெளியானது. இரண்டு பாகத்திலும் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்திருந்தார்.