மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
2010ம் ஆண்டு வெளியான படம் மதராசபட்டினம். ஏ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படம் ஆங்கிலேயர் காலத்து கதை. அதனால் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க லண்டனின் இருந்து அழைத்து வரப்பட்ட மாடல் அழகி மற்றும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எமி ஜாக்சன். ஆங்கிலேயே பெண் என்பதால் இந்த ஒரு படத்துடன் லண்டனுக்கே திரும்பி சென்று விடுவார் என்று கருதப்பட்ட நிலையில் அடுத்த படமே பாலிவுட் படமாக அமைந்தது. அந்த படம் ஏக் தீவானா தா. அதன் பிறகு பாலிவுட்டில் பிசியான நடிகை ஆனார். ஆங்கிலேயே பெண்ணாக இருந்தாலும் ஓரளவுக்கு தென்னிந்திய பெண்ணின் சாயல் இருந்ததால் தாண்டவம், தெறி, தங்கமகன், கெத்து, தேவி படங்களில் நடித்தார். கடைசியாக 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடித்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
அதன்பிறகு லண்டனுக்கு சென்றவர் திரும்பவே இல்லை. அங்கு காதலுடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயும் ஆனார். இப்போது அந்த காதலனையும் கழற்றி விட்டுவிட்டு புதிய காதலனோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வருகிறார். மதராசபட்டினத்திற்கு முதன் முதலாக அழைத்து வந்த அதே ஏ.எல்.விஜய், அவர் அடுத்து இயக்கும் படத்தில் எமிதான் நாயகி. அருண் விஜய் நாயகனான நடிக்கிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.