நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகனாக ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் அருண் விஜய். 1995ல் அறிமுகமானாலும் அவர் நடிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த 'மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க' படங்களின் மூலம் கொஞ்சம் முன்னேறி வந்தார். அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவருக்கு இன்னும் அதிகமான பிரபலம் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி சில நல்ல கதைகளில் நடித்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'யானை' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து முடித்து கொரானோ தாக்கம் காரணமாக வெளியாகாமல் இருந்த சில படங்களை அடுத்தடுத்து வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த விதத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'சினம்' படம் செப்டம்பர் மாதம் 16ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'பார்டர்' படம் அக்டோபர் 5ம் தேதியும் வெளியாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள 'அக்னிச் சிறகுகள்' படமும் அப்படங்களுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.