நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகனாக ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் அருண் விஜய். 1995ல் அறிமுகமானாலும் அவர் நடிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த 'மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க' படங்களின் மூலம் கொஞ்சம் முன்னேறி வந்தார். அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவருக்கு இன்னும் அதிகமான பிரபலம் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி சில நல்ல கதைகளில் நடித்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'யானை' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து முடித்து கொரானோ தாக்கம் காரணமாக வெளியாகாமல் இருந்த சில படங்களை அடுத்தடுத்து வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த விதத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'சினம்' படம் செப்டம்பர் மாதம் 16ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'பார்டர்' படம் அக்டோபர் 5ம் தேதியும் வெளியாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள 'அக்னிச் சிறகுகள்' படமும் அப்படங்களுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.