நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் நாயகன் ரன்வீர்சிங். சமீபத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல்மூலம் ஆபாசத்தை பரப்புதல்) போன்ற பிரிவுகளின் கீழ் சிங் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ரன்வீர் சிங்கிற்கு செம்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து ரன்வீர் சிங் தனது வழக்கறிஞருடன் போலீசில் ஆஜரானார். அவரிடம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ரகசிய விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும், எப்ஐஆரும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். கோர்ட் வழிகாட்டுதல்படி தேவைப்பட்டால் ரன்வீர் சிங் கைது செய்யப்படலாம். முதல்கட்ட விசாரணை முடிந்தாலும் தேவைப்டும் பட்சத்தில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.