நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் நாயகன் ரன்வீர்சிங். சமீபத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல்மூலம் ஆபாசத்தை பரப்புதல்) போன்ற பிரிவுகளின் கீழ் சிங் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ரன்வீர் சிங்கிற்கு செம்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து ரன்வீர் சிங் தனது வழக்கறிஞருடன் போலீசில் ஆஜரானார். அவரிடம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ரகசிய விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும், எப்ஐஆரும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். கோர்ட் வழிகாட்டுதல்படி தேவைப்பட்டால் ரன்வீர் சிங் கைது செய்யப்படலாம். முதல்கட்ட விசாரணை முடிந்தாலும் தேவைப்டும் பட்சத்தில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.