மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வெங்கட் பிரபு டீமில் இருப்பவர் நிதின் சத்யா. கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிதின் சத்யா சென்னை 28 படத்தின் மூலம் எல்லோரும் அறிந்த நடிகர் ஆனார். அதன்பிறகு சத்தம் போடாதே, தோழா, சரோஜா, பந்தையம், ராமன் தேடிய சீதை, உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி ஜருகண்டி, லாக்அப் படங்களை தயாரித்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் கொடுவா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கிறார்கள். பிக்பாஸ் சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பேச்சிலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படம் பற்றி நிதின் சத்யா கூறியதாவது: இராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை. இறால் மீன் கூட்டத்திற்குள் கொடுவா மீனை விட்டால் பயத்தில் இறால் மீண்கள் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டு செத்து விடும் என்பார்கள். அதுதான் இந்த படத்தின் மைய கரு. நான் இறால் பண்ணையில் வேலை செய்யும் சராசரி இளைஞனாக நடிக்கிறேன். ராமநாதபுரம் பகுதியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் நிதின்.