Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹீரோவான நிதின் சத்யா

30 ஆக, 2022 - 01:01 IST
எழுத்தின் அளவு:
Nithin-Sathya-is-the-hero-again

வெங்கட் பிரபு டீமில் இருப்பவர் நிதின் சத்யா. கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிதின் சத்யா சென்னை 28 படத்தின் மூலம் எல்லோரும் அறிந்த நடிகர் ஆனார். அதன்பிறகு சத்தம் போடாதே, தோழா, சரோஜா, பந்தையம், ராமன் தேடிய சீதை, உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி ஜருகண்டி, லாக்அப் படங்களை தயாரித்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் கொடுவா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கிறார்கள். பிக்பாஸ் சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பேச்சிலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படம் பற்றி நிதின் சத்யா கூறியதாவது: இராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை. இறால் மீன் கூட்டத்திற்குள் கொடுவா மீனை விட்டால் பயத்தில் இறால் மீண்கள் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டு செத்து விடும் என்பார்கள். அதுதான் இந்த படத்தின் மைய கரு. நான் இறால் பண்ணையில் வேலை செய்யும் சராசரி இளைஞனாக நடிக்கிறேன். ராமநாதபுரம் பகுதியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் நிதின்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை: நண்பர் கைதுஅமலா பாலுக்கு பாலியல் தொல்லை: நண்பர் ... அருண் விஜய்யின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் அருண் விஜய்யின் இரண்டு படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)