நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

யுவன் சங்கர் ராஜா திரைப்பட இசை அமைப்பாளராகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அதை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். முதல் இசை நிகழ்ச்சி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களில் விற்றது சாதனை அளவாக இருக்கிறது.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி ‛யு அண்ட் ஐ' என்ற தலைப்பில் யுவன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு யுவனின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருப்பதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.