நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் கணம் என்கிற பெயரில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனம் என்பதால், நட்புக்காக நடிகர் கார்த்தி இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதோடு குழந்தைகளுடன் சேர்ந்து அந்த பாடலிலும் பாடலிலும் நடித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஷர்வானந்த் கார்த்தியை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்