ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆல்யா தனது இரண்டு குழந்தைகளுடனும் ஜாலியாக நாட்களை கழித்து வருகிறார். இதற்கிடையில் பலரும் ஆல்யா மீண்டும் சீரியலில் நடிப்பரா? எப்போது சின்னத்திரையில் வருவார்? என அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். முன்னதாக இதற்கு பதிலளித்த ஆல்யா, தான் இப்போது குழந்தை வளர்ப்பதில் ஜாலியாக இருப்பதாகவும் விரைவில் பிட்னஸ் மற்றும் இதர விஷயங்களை சரிசெய்து நடிக்க வருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த சேனலில் நடிக்கப்போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் ஆல்யா, 'நான் நான்கு கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு பிடித்திருக்கிறது. எந்த சேனல் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் சேனலில் தான் நடிப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும், இன்னும் இரண்டே மாதங்களில் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்றும் கூறி உள்ளார். ஆல்யா மானசாவை மீண்டும் திரையில் பார்க்க போவதால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இப்போதே அவரது ரீ- என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.