ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் ஒரு மருத்துவமனை வீடியோ வெளியான நிலையில், அடுத்து விஜய்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இன்னொரு வீடியோவும் வெளியானது. இதனால் தற்போது பலத்த செக்யூரிட்டியுடன் வாரிசு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எண்ணூரில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி நடித்த ஒரு காட்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்திய போதும் அதை எல்லாம் மீறி இப்படி ஒரு புகைப்படம் வெளியானதை அடுத்து ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செக்யூரிட்டி மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.