நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி விட்டார். அதன் பிறகு அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகி விட்டார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . காரணம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி சிவகார்த்திகேயன், ஆர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் அவர்கள் இன்று 12வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.