ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
பெங்களூருவை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கும் நடிகையும், சுகேஷின் காதலியுமான ஜாக்குலின் பெர்ணாண்டசுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்து ஜாக்குலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வலைக்குள் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். என்றாலும் அதிகாரிகள் என்னை பாதிக்கப்பட்டவளாக பார்க்காமல், குற்றவாளியாக பார்க்கிறார்கள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். இதனை அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். சுகேஷிடம் நான் மட்டும் பரிசு பொருட்கள் வாங்கவில்லை. என்னைபோல வேறு சில நடிகைகளும் வாங்கி உள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். என்னை மட்டும் குற்றவாளி பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இது விசாரணை அதிகாரிகளின் உள்நோக்கம் கொண்ட பாரபட்ச நடவடிக்கை. என்னிடம் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணம். சுகேஷ் எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே நான் சம்பாதித்த பணம். அவற்றை திருப்பித் தரவேண்டும். இவ்வாறு ஜாக்குலின் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.