மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி |
நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறி கே.பாக்யராஜ் மீது நடிகர் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இது தொடர்பாக கே.பாக்ய ராஜுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தேர்தல் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறீர்கள், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறீர்கள். இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளீர்கள்.
இது சங்க விதிகளுக்கு முரணானது. தங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இது குறித்து செயற்குழுவில் ஆலோசித்து தங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்க கூடாது. என்பதற்கு தங்கள் பதிலை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டாலோ, அல்லது தங்கள் பதில் திருப்தி அளிக்காவிட்டாலோ தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.