நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். முதல் பாகம் அடுத்த மாதம் திரைக்கு வரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் சிம்பு ஒரு சாதாரண இளைஞராக இருந்து கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். இரண்டாம் பாகம் அந்த கேங்ஸ்டர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதையில் உருவாகிறது என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். அதோடு தற்போது பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.