நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு மிகப்பெரிய வெற்றி எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வதுண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் விக்ரம் படம் தான். கமலின் மார்க்கெட் இனி அவ்வளவுதான் என பலரும் நினைத்த நேரத்தில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வெற்றியும் அந்த படத்தின் மாபெரும் வசூலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன்-2 படத்தை உடனடியாக மீண்டும் துவங்க வைத்திருக்கிறது..
அதேபோலத்தான் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பு முடிந்தும் சில காரணங்களால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. விக்ரமின் கடந்த சில படங்கள் சரியாக ஓடாததும் அதற்கு காரணம்.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் இந்த மாத இறுதியில் கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 30 பொன்னியன் செல்வன் படம் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸை ஒட்டி, விக்ரம் தற்போது பரபரப்பாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த இரண்டு படங்களில் இரண்டுமே ஓடினாலும் அல்லது ஏதோ ஒன்று வெற்றி பெற்றாலும் கூட விக்ரமுக்கு அது லாபம் தான். அதனை பயன்படுத்தி துருவ நட்சத்திரம் படத்தையும் சூட்டோடு சூட்டாக வெளியிட்டு விடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் டிசம்பரில் படத்தை வெளியிடவும் தீர்மானித்து உள்ளார்களாம்.
அதுமட்டுமல்ல கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படமும் வெற்றி பெறும் பட்சத்தில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கும் ரசிகர்களிடமும் விநியோகஸ்தர்களிடமும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விடும் என்பதால் அதன் பலனை துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட்டு அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் முடிவு செய்துள்ளார்களாம்.