நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கில் வெளியாகி பாலிவுட்டுக்கு செல்லும் படமாகட்டும், பாலிவுட்டில் வெளியாகி தென்னிந்தியாவில் வெளியாகும் படமாகட்டும், இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் மற்றவர்களின் மனம் கோணாமல் அவர்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்காக சென்னைக்கு வந்த ரன்பீர் கபூர் நாகார்ஜுனா ஆகியோருடன் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த மூவருக்கும் தலைவாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வடநாட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் நம் உணவு வகைகளை ரொம்பவே ரசித்து சாப்பிட்டாராம்.