விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், தமிழில் காதல்னா சும்மா இல்ல, நாளை நமதே படங்களில் நடித்திருந்தாலும் எங்கேயும் எப்போதும் படம்தான் அவரை திரும்பி பார்க்க வைத்தது. கடைசியாக ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு கணம் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நிறைய ஆசைகளோடுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. கடைசியாக நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை சேரன் இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்த படத்தை நம்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அதனால் அது மக்களை சென்று சேரவில்லை. இதனால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பிறகு நானும் தெலுங்கில் பிசியாகி விட்டேன்.என்றாலும் தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எனது நெருங்கிய நண்பர் மீண்டும் தமிழ்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை விட அவர்தான் அதிக ஆர்வமாக இருந்தார். நிறைய கதைகளை எனக்கு அனுப்பினார். தமிழில் மீண்டும் நடித்தால் நல்ல படத்தில்தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவோடு இந்தேன். அப்படியொரு கதையாக கணம் படம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
தெலுங்கில் நான் ஆக்ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் புதிய முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக அம்மா சென்டிமென்டை மையமாக கொண்ட இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த படம் தமிழ் மக்களுக்கு பிடிக்கும், தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்று நம்புகிறேன். என்றார் சர்வானந்த்.