திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. வட சென்னை படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார். பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். இதுதவிர தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம், துப்பறிவாளன் படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான ஆண்ட்ரியாவின் குடும்பம் பெல்ஜியத்தில் வசித்து வருகிறது. ஆண்ட்ரியா மட்டும் சென்னையிலேயே தங்கி இருந்து படிப்பு, நடிப்பு, மாடலிங், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆண்ட்ரியாவின் தங்கை நாடியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்ட்டது. நாடியா தன்னுடன் பணியாற்றிய பெல்ஜியத்தை சேர்ந்த செட்ரிக் என்பவரை காதலித்து வந்தார். அவரையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்காக பல வருடங்களுக்கு பிறகு பெல்ஜியம் சென்ற ஆண்ட்ரியா தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டதோடு பெற்றோருடன் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்து அங்கேயே இருக்கிறார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா கூறும்போது “நமக்கு நெருக்கமான உள்ளங்கள் உலகில் மிகவும் குறைவு. அப்படியான அன்பானவர்களை சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சந்தோஷத்தை எனது குடும்பம் தற்போது அனுபவித்து வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு எனது குடும்பத்தோடு நேரம் செலவு செய்யும்போது என்னை நானே மறந்து போகிறேன். ஒரு பறவை போல பறந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார்.