நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் தனது 6வது சீசனை தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியல் சேனல் நிர்வாகம் அமைக்கும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களே கலந்து கொண்டு வந்தனர். குறிப்பாக நடிகர், நடிகைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேனல் குழு தேர்வு செய்யும் குழுவுடன் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான புரமோவை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களுடைய சுய குறிப்போடு கூடிய ஒரு காணொளி காட்சியை பதிவு செய்து அதனை vijay.startv.com என்ற தளத்திற்கு சென்று பதிவேற்றம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப ஆர்வமாக இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. 6வது சீசனில் 3 பேர் பொதுமக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.