ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தாவை நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி படத்தை தொடங்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது லிங்குசாமி கொடுத்த காசோலைகள் பணம் இன்றி திரும்பி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை தொடர்ந்து நேற்று லிங்குசாமி கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தினார். 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.