ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து தியேட்டர்களில் வெளிவந்து 1000 கோடி மேல் வசூலித்த திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் ஓடிடியில் வெளிவந்த பின்பு உலகம் முழுவதும் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்று சேர்ந்தது. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டி உள்ளனர்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்தே 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வந்துள்ளது. ஓடிடியில் வெளியாகி கடந்த 14 வாரங்களில் தொடர்ச்சியாக உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்துள்ள ஒரே திரைப்படம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் அல்லாத மொழிப் படங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் ஹாலிவுட் படங்கள்தான் அதிக சாதனை படைப்பது வழக்கம். முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் இப்படி ஒரு சாதனையைப் புரிந்திருப்பது இந்தியத் திரையுலகத்திற்குப் பெருமையான ஒரு விஷயம்.