மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி அனைத்திலுமாகச் சேர்த்து 400 கோடி வசூலைக் கடந்த படம். அப்படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுகுமார் இயக்கியிருந்தார். அப்படத்தின் வெற்றி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது.
நேற்று 'புஷ்பா 2' படத்தின் பூஜை நடைபெற்றது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கியுள்ளார்கள். அதில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சுகுமாரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இரண்டாம் பாகத்திற்காக அவருடைய சம்பளம் 50 கோடியாம். மேலும், படத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அவருக்கு உண்டாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் 100 கோடியை சம்பளமாகக் கடந்த ஒரே இயக்குனர் ராஜமவுலி. அவருக்கடுத்து 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் பெறும் இயக்குனராக சுகுமார் உயர்ந்திருக்கிறார் என்கிறது டோலிவுட் வட்டாரம்.