நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி அனைத்திலுமாகச் சேர்த்து 400 கோடி வசூலைக் கடந்த படம். அப்படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுகுமார் இயக்கியிருந்தார். அப்படத்தின் வெற்றி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது.
நேற்று 'புஷ்பா 2' படத்தின் பூஜை நடைபெற்றது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கியுள்ளார்கள். அதில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சுகுமாரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இரண்டாம் பாகத்திற்காக அவருடைய சம்பளம் 50 கோடியாம். மேலும், படத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அவருக்கு உண்டாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் 100 கோடியை சம்பளமாகக் கடந்த ஒரே இயக்குனர் ராஜமவுலி. அவருக்கடுத்து 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் பெறும் இயக்குனராக சுகுமார் உயர்ந்திருக்கிறார் என்கிறது டோலிவுட் வட்டாரம்.