நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் குறுகிய காலகட்டத்தில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். குறிப்பாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இன்னொரு பக்கம் ஸ்டோன் பெஞ்ச் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி புதிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். மேலும் நான்கைந்து குறும்படங்களை கொண்ட ஆன்தாலாஜி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதன்முதலாக 'அட்டென்ஷன் ப்ளீஸ்' என்கிற திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிதின் இசாக் தாமஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் என்பவர் தயாரித்துள்ளார். தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.