நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் ரஜினிகாந்த் என்ற பெயர் இன்னும் நிலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'தர்பார், அண்ணாத்த' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்காமல், மிகச் சுமாரான வசூலைத்தான் கொடுத்தன. இருப்பினும் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என இன்றைய பல இயக்குனர்கள் ஆசையுடன் காத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த்தின் அடுத்த படமாக நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'ஜெயிலர்' படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், திரைக்கதை முழு வடிவம் பெற சில மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று படப்பிடிப்பு ஆரம்பமாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த' ஆகிய படங்களின் முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறாமல் ஐதராபாத், மும்பை, டார்ஜிலிங் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. இப்படத்திற்காக சில பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.