மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இருவரும் பிரியப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதற்குப் பிறகு அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருவரும் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இன்று அவர்களின் மூத்த மகன் யாத்ரா, அவரது பள்ளியில் விளையாட்டுக் குழு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் இருக்கும் புகைப்படம் சமக வலைத்தளங்களில் வைரலாகியது.
“இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பமானது. எனது மூத்த மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக உறுதி மொழி ஏற்கும் பள்ளியின் நிகழ்வை திங்கள் கிழமை காலையில் பார்க்கிறேன்,” என ஐஸ்வர்யா அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.