இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இருவரும் பிரியப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதற்குப் பிறகு அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருவரும் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இன்று அவர்களின் மூத்த மகன் யாத்ரா, அவரது பள்ளியில் விளையாட்டுக் குழு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் இருக்கும் புகைப்படம் சமக வலைத்தளங்களில் வைரலாகியது.
“இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பமானது. எனது மூத்த மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக உறுதி மொழி ஏற்கும் பள்ளியின் நிகழ்வை திங்கள் கிழமை காலையில் பார்க்கிறேன்,” என ஐஸ்வர்யா அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.