நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

புகழ்பெற்ற திரைப்படமான தி லார்ட் ஆப் ரிங் 3 பாகங்களாக வெளிவந்துள்ளது. இதன் 4வது பாகம் தி ரிங்ஸ் ஆப் பவர் என்ற பெயரில் வெப் தொடராக தயாராகி உள்ளது. இந்த தொடர் ஓடிடியில் வெளியாகிறது. இதை தொடர்ந்து இதனை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மும்பையில் இதன் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. இதில் தொடரில் நடித்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஒரு படத்தின் புரமோசனுக்காக இத்தனை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மொத்தமாக கலந்து கொண்டது இப்போதுதான் என்கிறார்கள். தொடர் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது.
பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெயின், தொடரில் நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென், மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த், தைரோ முஹாப்தீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.