இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பு தவிர்த்து சமூக சேவையில் மிகவும் அக்கறை கொண்டவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல இடங்களில் ரத்தவங்கி நடத்தி வருகிறார். இந்த மாநிலங்களில் தனியார் நடத்தும் ரத்த வங்கிகளில் இதுதான் பெரிது என்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றுவதற்கென்றே தனி குழுவை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுகிறார். ஐதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் இது அமைகிறது. இந்த மருத்துவமனை கட்ட தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி மருத்துவ அறக்கட்டளைக்கு 20 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
”நான் சம்பாதித்தது எல்லாம் சினிமாவில்தான். சினிமா தொழிலாளர்களின் உழைப்பால்தான். அதை அவர்களுக்கு சிறிதளவேனும் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறேன். எத்தனை கோடி செலவானாலும் இதை கட்டிமுடிப்பேன்” என்கிறார் சிரஞ்சீவி.