மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார். திரிஷாவுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றும் அவர் குறித்து பரவும் இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சி மற்றும் குழப்பமடைய செய்துள்ளது. அவரது பதிவில், ‛கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கவேண்டும். ஒரு குப்பை தன்னைத்தானே வெளியேறி கொள்வதைப் போன்றது எனப் பதிவிட்டுள்ளார். யாரை மனதில் வைத்து அவர் இதை பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுபு்பியுள்ளனர்.