இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

அம்மணி படத்தின் மூலம் அறிமுகமானவர் செம்மலர் அண்ணம். முறைப்படி நடிப்பு பயிற்சி முடித்து நடிக்க வந்தவர். கோயம்புத்தூர் சொந்த ஊர். அதன்பிறகு மகளிர் மட்டும், குரங்கு பொம்மை, தம்பி, மாடத்தி, சில்லு கருப்பட்டி, பொன்மகள் வந்தாள் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் தற்போது சஷ்தி என்ற குறும்படத்தின் கதையின் நாயகியாக நடித்துள்ளார். ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு தாய்க்கும் வளர்ப்பு மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த குறும்படம். தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுடைய கருத்துக்கள் எப்படி மாறுகின்றன என்பதை சொல்கிறது.
லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது. இதில் தாயாக நடித்துள்ள செம்மலர் அன்னத்துக்கு சிறந்த நடிகைக்கான பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.