மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகிறது. இது ஒரு சமுதாய சீர்கேடு என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபலங்களே மலிவான விளம்பரங்களுக்கு அதை செய்து பரப்பி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது பிரபல ஹிந்தி டி.வி தொடர் நடிகை கனிஷ்கா ஷோனியும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருக்கிறார். தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் மூலம் புகழ்பெற்றவர் இவர். இந்த தொடர் தமிழில் ‛என் கணவன் என் தோழன்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
சுயதிருமணம் குறித்து கனிஷ்கா கூறியிருப்பதாவது: தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் நிதானத்தோடும், தெளிந்த சிந்தனையோடும்தான் இதை செய்திருக்கிறேன். என்று கூறி உள்ளார்.