இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகிறது. இது ஒரு சமுதாய சீர்கேடு என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபலங்களே மலிவான விளம்பரங்களுக்கு அதை செய்து பரப்பி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது பிரபல ஹிந்தி டி.வி தொடர் நடிகை கனிஷ்கா ஷோனியும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருக்கிறார். தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் மூலம் புகழ்பெற்றவர் இவர். இந்த தொடர் தமிழில் ‛என் கணவன் என் தோழன்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
சுயதிருமணம் குறித்து கனிஷ்கா கூறியிருப்பதாவது: தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் நிதானத்தோடும், தெளிந்த சிந்தனையோடும்தான் இதை செய்திருக்கிறேன். என்று கூறி உள்ளார்.