ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொதிகை சேனல் ஸ்வராஜ் என்ற தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. இந்த தொடர் இதுவரை அதிகம் அறியப்படாத சுதரந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை பற்றியதாகும்.
இந்த தொடர் வருகிற 20ம் தேதி முதல் 75 வாரங்களுக்கு தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் மறு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது: நாடு முழுவதிலும் இருக்கும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஆனால் அறியப்படாத 75 போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை 75 வாரங்களுக்கு தொடராக ஒளிபரப்பப்படும். தமிழகத்தை சேர்ந்த வேலுநாச்சியார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீரர்களின் வரலாறும் இந்த தொடர்களில் இடம்பெரும். மேலும் விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்த ஒரு தனிப்பட்ட தொடரும் விரைவில் வெளியாகும் என்றார்.