திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொதிகை சேனல் ஸ்வராஜ் என்ற தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. இந்த தொடர் இதுவரை அதிகம் அறியப்படாத சுதரந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை பற்றியதாகும்.
இந்த தொடர் வருகிற 20ம் தேதி முதல் 75 வாரங்களுக்கு தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் மறு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது: நாடு முழுவதிலும் இருக்கும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஆனால் அறியப்படாத 75 போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை 75 வாரங்களுக்கு தொடராக ஒளிபரப்பப்படும். தமிழகத்தை சேர்ந்த வேலுநாச்சியார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீரர்களின் வரலாறும் இந்த தொடர்களில் இடம்பெரும். மேலும் விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்த ஒரு தனிப்பட்ட தொடரும் விரைவில் வெளியாகும் என்றார்.