மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கொரோனா தாக்கம் வந்த பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகமாகியது. திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். தியேட்டர்களில் வெளியான படங்களும் நான்கு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால், தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகை குறைவடைய ஆரம்பித்தது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் திண்டாட ஆரம்பித்தன.
இந்நிலையில் ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தெலுங்குத் திரையுலகில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தினார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் காரணமாக தற்போது சில புதிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
அதன்படி, ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பின்பு நான்கு வாரங்களுக்குப் பதிலாக எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்களாம். பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததை அடுத்து இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமாவில் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்ற முறைதான் உள்ளது. தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் மாற்றம் வந்துள்ளதை அடுத்து அது தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்குமா என்பது விரைவில் தெரியும்.