'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா |
கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இருபாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் ஏற்கனவே ‛பொன்னி நதி' என்ற முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து ‛சோழா சோழா' என்ற இரண்டாவது பாடலை நாளை(ஆக., 19) மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர். ஆதித்த கரிகாலன் பெருமையை சொல்லும் விதமாக இந்த பாடல் உருவாகி உள்ளது. இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, சத்யபிரகாஷ், விஎம் மகாலிங்கம், நகுல் அபயங்கர் ஆகியோர் பாடி உள்ளனர்.