நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

1980-90களின் திரைப்பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இடத்தில் ஒன்றாக கூடி தங்களின் பழைய கால மலரும் நினைவுகளை கொண்டாடி வருவது வழக்கம். இதேப்பாணியில் முதன்முறையாக சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒன்றுகூடி கொண்டாட்டம் நடத்தி உள்ளனர்.
1990களில் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர். 20 வருடக்கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர். ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுப்பட்ட இவர்கள் உடைகளிலும் தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினர்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் சங்கமித்த இந்த கொண்டாட்டத்தில் கவுஷிக், தீபக், அப்ஸர், கவுதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், ராகவி சசி, ஷில்பா, அம்மு இராமசந்திரன், வெங்கட், நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு, போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட் , ரிஷி, அஞ்சு, கணேஷ்கர், ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், கேஎஸ்ஜி வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம், பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸ்வேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தாண்டு போன்று இனி ஒவ்வொரு ஆண்டும் இதுமாதிரி ரீ-யூனியன் கொண்டாட்டத்தை தொடர சின்னத்திரை நட்சத்திரங்கள் முடிவு செய்துள்ளனர்.