நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டு கோளை ஏற்று பலரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களது புகைப்படங்களுக்குப் பதிலாக தேசியக் கொடியை 'டி.பி.' ஆக வைத்துள்ளார்கள்.
இந்தியத் திரையுலகின் மூத்த இசையமைப்பாளரும், ராஜ்ய சபா நியமன உறுப்பினருமான இளையராஜா திருவண்ணாமலையில் இன்று தேசியக் கொடியை ஏற்றினார். நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினக் கொண்டாட்டம் குறித்து ஏற்கெனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிலரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இன்று தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கம் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.