நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா தற்போது அவருடன் அவ்வப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா.
அதேபோல தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்து வரும் இறைவன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வந்த நயன்தாரா, அந்த படத்தில் தனது காட்சிகளை சமீபத்தில் முடித்து கொடுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர்-3௦ல் வெளியாக இருக்கிறது. இது தவிர அகிலன் என்கிற படத்தை முடித்துவிட்ட ஜெயம் ரவி, இறைவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.