ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவருக்கு தேவையான நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் தனக்கு ஏற்பட்ட இந்த நிலை இன்னொருவருக்கும் ஏற்படக்கூடாது என்று சொல்லி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார் நடிகை மீனா.
இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛இந்த உலகில் ஒரு உயிரை காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உடல் உறுப்பு தானம் என்பது உயிரை காப்பாற்றும் உன்னதமான வழியாகும். நீண்ட நாள் நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு. நான் இதை தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறேன். எனது கணவருக்கு ஒரு நன்கொடையாளர் கிடைத்திருந்தால் எனது வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு நன்கொடையாளர் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும். அதனால் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் மீனா.