நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் தங்களது சகோதரர்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவரும் சொத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். அதனால் தங்களது தந்தையின் சொத்துக்களை தங்களுக்கு சேர வேண்டிய பங்கினை உரிய முறையில் பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
தற்போது சாந்தி தியேட்டர் வளாக சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சியில் ராம்குமார், பிரபு ஈடுபட்டுள்ளதாக அந்த சொத்தை விற்பனை செய்வதற்கு இடைக்காலை தடை விதிக்க வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், சாந்தி தியேட்டர் வளாகத்தை ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் ராம்குமார், பிரபு ஆகியோர் விற்பனை செய்ய ஈடுபட்டிருப்பதாக சொல்லி அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
அதையடுத்து ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள், சாந்தி தியேட்டர் விற்பனை நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டது. அதன் பிறகுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று வாதாடினார்கள். அதோடு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வழக்கறிஞர்களும், 2010ம் ஆண்டிலேயே சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் கை மாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தங்கள் சார்பில் வாதாடினார்கள். இப்படி மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.