மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையின் நயன்தாரா என பெயரெடுத்த ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலின் 'சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரியாகிறார். தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் அபிஷேக் சங்கர் ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் வக்கீல் ஜான்சி ராணி என்கிற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை ரச்சிதாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. 'புதுப்புது அர்த்தங்கள்' தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.