பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
விஜய் தற்போது முதன்முறையாக வாரிசு என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவ வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பாலிவுட்டிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து இந்த படத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். பாலிவுட்டிலிருந்து சஞ்சய் தத், மலையாளத்திலிருந்து பிரித்விராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்றும் அதில் ஒருவராக நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எண்பது, தொண்ணூறுகளில் ஆக்சன் கிங்காக வலம் வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பிரபல ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன். அந்த வகையில் முதன்முறையாக விஜய்யுடன் இவர் இணைந்து நடிப்பதும் விஜய்க்கு வில்லனாக நடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்யும்.