இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கன்னடத்தில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவர். தற்போது பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அமிதாப் பச்சனுடன் குட் பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்தியில் மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அடிக்கடி மும்பை செல்லும் அவர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 8 கோடி என்கிறார்கள். மூன்று அறைகள் கொண்ட இந்த வீட்டில் தனது அம்மாவுடன் ராஷ்மிகா தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார். ராஷ்மிகாவுக்கு அவர் பிறந்த ஊரான கர்நாடக மாநிலம் கூர்க்கில் பிரமாண்ட பங்களா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் மற்றும் சென்னையிலும் வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.