நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படங்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. இதனால் அப்செட்டாகி இருக்கும் அக்சய் குமார் தனது சம்பளத்தை கூட அடுத்தடுத்த படங்களுக்கு குறைத்துக் கொண்டார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் அடுத்ததாக தான் நடித்துள்ள ரக்சா பந்தன் படத்தின் ரிலீஸை ரொம்பவே எதிர்பார்க்கிறார் அக்சய் குமார். அதற்காக இப்போதே இந்தப்படத்தின் புரமோஷனில் இறங்கிவிட்டார். இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் சோசியல் மீடியாவில் உரையாடிய அக்சய் குமாரிடம் ரசிகர் ஒருவர் மலையாளத்தில் நீங்கள் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்
அதற்கு பதிலளித்த அக்சய் குமார், “எனக்கும் மலையாளத்தில் நடிக்க விருப்பம் தான். ஆனால் எனக்கு மலையாளம் பேச வராது என்று கூறியுள்ளார். அதேசமயம் எனக்கு பதிலாக யாரும் டப்பிங் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை என்றும், நானே பேசுவது தான் எனக்கு பிடிக்கும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் தமிழில் ரஜினியுடன் இணைந்து நடித்துவிட்டேன்.. கன்னடத்திலும் நடித்துவிட்டேன். அதேபோல மலையாளத்தில், அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என கூறியுள்ள அக்சய் குமார் தனது விருப்பம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷினிடம் தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் பிரியதர்ஷன், ஹிந்தியில் அதிகப்படியான படங்களை அக்சய் குமாரை வைத்து தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.