சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இந்த தொடரில் மனிஷா ஜித், திவ்யபத்மினி, சந்தோஷ், மனுஷ், அம்மு ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை கதைக்களமாக இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அண்மையில் 100வது எபிசோடை கடந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினர். இனி வரும் நாட்களில் ஹீரோயினின் திருமணம் என சுவாரசியமான எபிசோடுகள் வர இருக்கிறது.
இந்நிலையில், தொடரின் நாயகி மனிஷா ஜித் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அவர் நடித்த எபிசோடுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் எனவும், அதன்பிறகு புது ஹீரோயின் நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் எனவும் செய்திகள் உலா வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்த மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியுள்ள நிலையில், புதிதாக யார் கதையின் நாயகியாக நடிக்கப்போகிறார்? அவரால் மனிஷா ஜித்தின் இடத்தை நிரப்ப முடியுமா? என்ற கேள்வி நேயர்களிடம் எழுந்துள்ளது.