சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி |
பாலிவுட்டில் தயாராகி வரும் பிரமாண்ட படம் பிரம்மாஸ்திரா : சிவபெருமானின் சக்திகளில் ஒன்றான அக்னி சக்தியை பெற்ற இக்கால இளைஞன் ஒருவனின் கதை. இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மவுனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் பலர் நடித்து உள்ளனர். அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். ப்ரீதம் இசை அமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் இடம் பெறும் தேவா தேவா... என்ற பாடல் வெளியாகி டிரெண்ட் ஆகியுள்ளது. படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் சக்தியை பெறும்போது இந்த பாடல் அதன் பின்னணியாக ஒலிக்க இருக்கிறது. இது ஒரு வகையான பக்தி பாடலும் ஆகும்.
பாடல் பற்றி இசை அமைப்பாளர் ப்ரீதம் கூறியிருப்பதாவது: இந்த பாடலுக்கு நான் இசையமைக்கும்பொழுது ஒரு ஆன்மிக உணர்வு என்னுள் வந்தது. 'தேவா தேவா' மூலம், பாரம்பரிய மற்றும் பக்தி கூறுகளை முக்கியமாக வைத்து, இசையை நவீனப்படுத்தியுள்ளோம். இந்த ஆன்மிகப் பாடல் ஒரு உலக அனுபவத்தைத் தருகிறது. இது அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன். என்கிறார்.
கொலவெறி, ரவுடி பேபி, ஊ சொல்றியா மாமா மாதிரியான பாடல்களை விட இதுபோன்ற ஆன்மிக பக்தி பாடல்கள் டிரெண்ட் ஆவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.